Published : 25 Dec 2024 06:13 AM
Last Updated : 25 Dec 2024 06:13 AM
1930களில் நாகூரில் உள்ள செட்டியார் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவனாக, இஸ்லாமிய பிரார்த்தனைப் பாடலைப் பாட ஆரம்பித்த இ.எம்.ஹனீபா விரைவில் அது தன் வாழ்நாள் தொழிலாக மட்டுமின்றி, ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தின் அழைப்புக் குரலாகவும், கோடானு கோடி தமிழர்களின் அபிமானக் குரலாகவும் மாறும் என்று நினைத்திருக்க மாட்டார். ஏனென்றால் அவருக்கு இசையில் முறையான பயிற்சி இல்லை.
சுயம்புக் கலைஞர்: 1925 டிசம்பர் 25ஆம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையத்தில் பிறந்த ஹனீபா, வளர்ந்ததெல்லாம் தந்தையின் ஊரான நாகூரில்தான். மலேசியாவில் பணிபுரிந்த தந்தை, கிராமபோன் ஒன்றை வீட்டுக்குக் கொண்டுவர, கவ்வாலி இசையையும், அன்று பிரபலமான தமிழ் இஸ்லாமியப் பாடகர் காரைக்கால் ஏ.எம்.தாவூத்தின் இசைத்தட்டுக்களையும் கேட்டுத் தன் இசைஞானத்தை மெருகேற்றிக்கொண்டார் ஹனீபா.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment