Published : 28 Nov 2024 06:13 AM
Last Updated : 28 Nov 2024 06:13 AM

ப்ரீமியம்
தமிழ்நாட்டுக்குத் தேவை, தடையற்ற உள்ளாட்சித் தேர்தலே!

‘இந்து தமிழ் திசை’யின் கருத்துப்பேழை பகுதியில், 21.11.2024 அன்று ‘தமிழ்நாட்டுக்குத் தேவை ஒருங்கிணைந்த உள்ளாட்சித் தேர்தல்’ கட்டுரை வெளியாகியிருந்தது. தமிழ்நாட்டில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், வரும் டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டியிருப்பதையும் அதற்கான உரிய அறிவிப்புகள் மாநிலத் தேர்தல் ஆணையத்திடமிருந்து இதுவரை வராமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி இருப்பதோடு, அரசின் நகர்வுகளுக்காக மாநிலத் தேர்தல் ஆணையம் காத்துக்கொண்டிருப்பதையும் இக்கட்டுரை கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

உருவாக்​கப்பட்ட குழப்பம்: நகர்ப்புற உள்ளாட்​சிகளைத் தரம் உயர்த்​தும்போது அருகில் உள்ள ஊராட்​சிகளை இணைப்பது வழக்கமான நடவடிக்கைதான் எனவும், அதனால் ஏற்படும் வார்டு​களின் மறுவரையறைப் பணிகள் முடியும் வரை தேர்தல் நடத்துவது தள்ளிப்​போகலாம் எனவும் குறிப்​பிட்​டிருக்​கிறார் கட்டுரை​யாளர். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, நூற்றுக்​கணக்கான கிராம ஊராட்​சிகளை வலுக்​கட்​டாயமாக நகரங்​களோடு இணைக்கும் முயற்சி என்பது வழக்கமான நடவடிக்கை அல்ல.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x