Published : 24 Nov 2024 07:59 AM
Last Updated : 24 Nov 2024 07:59 AM
தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு தொடக்கக் காலத்திலிருந்தே வெளிப்பட்டுவந்துள்ளது. நவீனக் காலத்திலும் அதன் தொடர்ச்சியைப் பார்க்க முடியும். ஆனால், பெண்ணியம் என்கிற நோக்கில் தமிழில் தொடக்கக் காலத்தில் கதைகள் எழுதப்படவில்லை; பெண்ணுக்காக உருவாக்கப்பட்ட விழுமியங்கள் கேள்வி கேட்கப்படவில்லை. 1960களில் எழுதவந்த அம்பை, இத்தகைய கேள்விகளைத் தமிழ் இலக்கியத்தில் தொடங்கிவைத்தவர் எனலாம்.
அம்பை, 1944இல் கோயம்புத்தூரில் பிறந்தவர். பதின்ம வயதில் எழுதத் தொடங்கினார். அம்பை தன் கதைகளுக்கான மொழிக்குச் சிரமம் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. அவர் தன்னிடம் பேசுவதற்காக இருந்த விஷயங்களைச் சொல்வதற்கான ஊடகம் என்கிற அளவிலேயே மொழியைக் கண்டுள்ளார். அதனால், அவரது கதைகளின் மொழி சுமையாக இல்லை. பெரும் பரிசோதனை முயற்சிகள் நடைபெற்ற காலக்கட்டத்திலும் அம்பையின் கதைகள் உணர்வுரீதியாக இருந்தன. அதுபோல் வெகுஜனக் கதைகளை வாசித்திருந்தாலும், அதன் அழகியல் மொழியைக் அவர் கைக்கொள்ளவில்லை. தான் சொல்லவந்த பொருளுக்கு ஒரு மொழி என்கிற ரீதியிலேயே அவர் அதை அணுகினார். பெண் என்கிற நிலையில் அந்தக் கதைகள் கொஞ்சம் சாய்வு கொண்டிருந்தாலும் அங்கும் உணர்வுகளுக்கு இடையிலேயே பயணித்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment