Published : 21 Nov 2024 06:29 AM
Last Updated : 21 Nov 2024 06:29 AM

ப்ரீமியம்
அரசின் தீவிரக் கவனத்தைக் கோரும் வானிலை நிகழ்வுகள்

2024ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 67 நாள்களுக்குத் தீவிர வானிலை நிகழ்வுகளைத் தமிழ்நாடு எதிர்கொண்டதாகவும், தேசிய அளவில் 255 நாள்கள் (மொத்தமுள்ள 274 நாள்களில்) தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொண்டதாகவும் டெல்லியைச் சேர்ந்த அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. காலநிலை மாற்றத்தை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது.

2023இல் இதே காலத்தில் தமிழ்நாடு 27 நாள்களும், தேசிய அளவில் 2023இல் 235 நாள்களும், 2022இல் 241 நாள்களும் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் உயிரிழப்பு தேசிய அளவில் 18% அதிகரித்துள்ளது. தீவிர வானிலை நிகழ்வுகள் கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருந்தாலும் இந்த ஆண்டு அவற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. தீவிர வானிலை நிகழ்வுகள் நடைபெறும் நாள்கள் அதிகரித்துள்ளது மட்டுமில்லாமல், அவை தீவிரமடைந்துள்ள, மோசமான பாதிப்பையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x