Published : 21 Nov 2024 06:19 AM
Last Updated : 21 Nov 2024 06:19 AM
தமிழ்நாட்டில் 2019 டிசம்பர் இறுதியில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக் காலம், 2025 ஜனவரி முதல் வாரத்தில் முடிவடைய உள்ளது. ஐந்து ஆண்டுக் காலம் முடிவடையும் சூழலில், ஊரகப் பகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றாக வேண்டும். ஆனால், ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுமா, இல்லையா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாகத் தெளிவான அறிவிப்பு மாநில அரசிடமிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. தேர்தலை நடத்தும் மாநிலத் தேர்தல் ஆணையத்திடமிருந்தும் வெளியிடப்படவில்லை. எனவே, தேர்தல் குறித்து முரண்பாடான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், ஒருங்கிணைந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றி அரசு ஒரு தீர்க்கமான முடிவை நோக்கி நகர்வது நல்லது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment