Published : 21 Nov 2024 06:15 AM
Last Updated : 21 Nov 2024 06:15 AM

ப்ரீமியம்
ஆய்வு மாணவர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டாமா?

அண்மையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களில் வழக்கத்துக்கு மாறான ஓர் ஒற்றுமை இருந்தது! இரண்டுமே 39ஆவது பட்டமளிப்பு விழாக்கள் என்பதுடன், இரண்டு விழாக்களிலும் ஆய்வு மாணவர்கள் இருவர் விழா மேடையிலேயே ஆளுநரிடம் புகார் மனு ஒன்றை அளித்தது சர்ச்சையானது. ஆய்வு மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களில் கண்ணியத்துடன் நடத்தப்படவில்லை என்பதுதான் இரண்டு புகார்களின் சாரம்.

தங்கள் ஆய்வு வழிகாட்டிகள், ஆராய்ச்சிப் பணியைத் தவிர, அவற்றுக்குத் தொடர்பில்லாத வேலைகளுக்கு - வீட்டு வேலைகள் உள்பட - தங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று அந்த ஆய்வு மாணவர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x