Published : 17 Nov 2024 07:22 AM
Last Updated : 17 Nov 2024 07:22 AM
ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் பல படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார் பட்டு எம்.பூபதி. பழம்பெரும் தமிழ் இலக்கியங்கள், சமகாலத் தமிழ்ப் படைப்பாளிகள் என்று இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்களின் பட்டியல் நம்மை அசர வைக்கிறது. சாகித்திய அகாடமியின் ஆஸ்தான மொழிபெயர்ப்பாளர் என்று சொல்லத்தக்க அளவில் இவர் பணி விரிந்திருக்கிறது.
ராஜம் கிருஷ்ணனின் ‘வேருக்கு நீர்’, கு.அழகிரிசாமி சிறுகதைகள், லா.ச.ரா.வின் ‘சிந்தா நதி’, சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’, கனிமொழியின் கவிதைகள், அசோகமித்திரன், ஜெயங்கொண்டான் ஆகியோரின் படைப்புகள் மட்டுமின்றி, முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி முதலான பழம்பெரும் இலக்கியங்களையும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்திருக்கிறார். பள்ளியில் படிக்கும்போதே குறுந்தொகைப் பாடல் ஒன்றை மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்புக்காகத் திசை எட்டும், தமிழ்ப் பேராயம் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...