Published : 28 Oct 2024 06:17 AM
Last Updated : 28 Oct 2024 06:17 AM
சென்னையில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பெருமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பின்னர் அது நீக்கிக்கொள்ளப்பட்டது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் பலவீனமடைந்ததால் முன்கணிப்புகளைவிடக் குறைவான மழையே பெய்தது. எனினும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த முந்தின நாள் (அக்டோபர் 15) கொட்டிய மழையால், பல இடங்களில் வெள்ளம் வடியாமல் இருந்தது. பட்டாளம், வியாசர்பாடி, பெரம்பூர், சூளை முதலான வட சென்னைப் பகுதிகளிலும் திருவான்மியூர், தி.நகர், துரைப்பாக்கம், வேளச்சேரி முதலான தென் சென்னைப் பகுதிகளிலும் வெள்ளம் வடிய ஒரு நாள் ஆனது.
எப்போதும்போல் சமூக ஊடகங்களில் விவாதம் நடந்தது. சிலர் இந்த மழையைச் சென்னை நகரால் தாங்க முடியவில்லையே என்று விமர்சித்தனர். வானிலை முன்னறிவிப்பு ஆர்வலர் ஒருவர் இதற்கு விடையளித்தார். சென்னையில் 30 செ.மீ. - 40 செ.மீ. (சென்டிமீட்டர்) மழை பெய்தால் அது வடிவதற்குத் தாமதமாகவே செய்யும் என்றார் அவர். அப்படிச் சொன்னதால் பல இணையவாசிகளின் தாக்குதலுக்கும் உள்ளானார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment