Published : 21 Oct 2024 06:13 AM
Last Updated : 21 Oct 2024 06:13 AM
ஏஐ என்றாலே ரோபாட்கள், அதிலும் குறிப்பாக ‘ஹியூமனாய்டுகள்’ என்றழைக்கப்படும் மனித உருவில் உள்ள இயந்திரங்களே நம் மனதில் தோன்றுகின்றன. மனிதர்களைப் போலவே சிந்திக்கும் தொழில்நுட்பங்களின் வரலாறு என்பது, மனிதர்களைப் போலவே வேலை செய்கிற, மனிதர்களைப் போலவே உருவம் உள்ள இயந்திரங்களை உருவாக்குவதில்தான் தொடங்கியது. எனவேதான் செயற்கை நுண்ணறிவு என்பது 20 ஆம் நூற்றாண்டுத் தொழில்நுட்பமாக இருந்தாலும், அதைப் புரிந்துகொள்வதற்கு இந்தப் பாலைவனம் வரை நாம் காலப் பயணம் செய்ய நேரிட்டது.
பாலைவனத்தில், அந்தப் பிரமிடை நோக்கி நாங்கள் சென்ற பயணத்தின் நோக்கம், வரலாற்றில் மனிதர்கள் உருவாக்கிய முதல் மனித உருவிலான தானியங்கிகளை நேரடியாக நலம் விசாரித்துவிட்டு வருவதுதான். 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின் நைல் நதி நாகரிகம் அதன் உச்சத்தில் இருந்தபோதுதான் அது நடந்திருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment