Published : 06 Sep 2024 06:20 AM
Last Updated : 06 Sep 2024 06:20 AM
கடந்த சில நாள்களாக ‘டெலிகிராம்’ சேவைக்கும், அதன் நிறுவனர் பாவெல் துரோவுக்கும் என்ன நடக்கிறது என்பதைத் தொழில்நுட்ப உலகம் ஆர்வத்தோடும் கவலையோடும் நோக்குகிறது. ஏனெனில், இந்த விவகாரம் டெலிகிராம் அல்லது துரோவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல: மாறாக, இந்த விவகாரமும் வழக்கும் தொழில்நுட்ப உலகின் எதிர்காலத் திசையைத் தீர்மானிக்கக்கூடியதாக அமையும் என்றே கருதப்படுகிறது.
டெலிகிராம் சேவை சட்டவிரோதச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டில், ஃபிரான்ஸில் துரோவ் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். டெலிகிராம் போன்ற தொழில்நுட்ப மேடையில் பகிரப்படும் கருத்துகளுக்கு அதன் நிறுவனர் எப்படிப் பொறுப்பேற்க முடியும் என்பது துரோவ் தரப்பின் வாதம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT