Last Updated : 03 Sep, 2024 03:45 PM

 

Published : 03 Sep 2024 03:45 PM
Last Updated : 03 Sep 2024 03:45 PM

ப்ரீமியம்
முதலீடு மட்டுமல்ல, உரிமைகளும் முக்கியம்!

திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் வேலை செய்ய வேண்டுமா கூடாதா என்ற விவாதத்தையே எழுப்பியிருக்கிறது, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் செயல்பாடு. திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் அதிக விடுப்பு எடுப்பார்கள்; குழந்தைப்பேறு ஒரு பிரச்சினையாக இருக்கும், இந்து திருமண முறைப்படி அணியும் தாலி அல்லது ஆபரணம் உற்பத்தித் தளத்தில் ஆபத்து விளைவிப்பதாக இருக்கும் என்றெல்லாம் காரணங்களை முன்வைத்து, திருமணமான பெண்களுக்கான பணிவாய்ப்பை இந்நிறுவனம் மறுப்பதாக எழுந்த புகார்கள்தான் இந்த விவாதத்தின் பின்னணி.

ஜூன் 25 இல் சர்வதேசச் செய்தி நிறுவனம் ஒன்று இதுகுறித்து செய்தி வெளியிட்டது. ஓராண்டு காலத்தில் அந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள் 20க்கும் மேற்பட்ட முறை ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்குச் சென்று பார்வையிட்டும், விவரங்கள் சேகரித்தும் இந்தச் செய்திக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x