Published : 11 Aug 2024 07:08 AM
Last Updated : 11 Aug 2024 07:08 AM

ப்ரீமியம்
ஓவியச் சந்தை தமிழகக் கலைப்படைப்புகளுக்கான வாசல்

அமரவர்மா தனது ஓவியத்துடன்

ஓவியக் கண்காட்​சிகள் மட்டுமே இதுவரை நடந்து வந்த சென்னை​யில், அரசு சார்பில் முதன்​முறையாக ஓவியச் சந்தை நடைபெற்றுள்ளது. ஆகஸ்ட் 3, 4, 5ஆகிய நாள்களுக்கு சென்னை எழும்பூர் அரசு அருங்​காட்சியக வளாகத்தில் இந்நிகழ்வு நடந்தது. கேன்வாஸ், அக்ரிலிக், வாட்டர் கலர், மணல் வகை ஓவியங்​களுடன் பல வகையான சிற்பங்​களும் விற்பனைக்கு வைக்கப்​பட்​டிருந்தன. தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை இந்நிகழ்வை ஒருங்​கிணைத்தது. கலைஞர்கள் 100 பேர் பங்கேற்​றனர்​.

சென்னை கவின்​கலைக் கல்லூரி மாணவர்​களின் கைவண்​ணத்தில் உருவான கலைப்​பொருள்களை நிகழ்வில் அதிகளவில் காண முடிந்தது. சுடுமண் (டெரகோட்டா), பீங்கான் (செராமிக்) வகைக் கலைப்​பொருள்கள் பல, அவர்களது திறனுக்குச் சான்று கூறின. “கைவிரல்​களால் அழுத்தி அழுத்தி வடிவத்தை உருவாக்கும் ‘பிஞ்ச்’ முறை, பல பகுதி​களைத் தனித்​தனியாகச் செய்து ஒரே உருவமாக இணைக்கும் ‘ஸ்லிப் காஸ்ட்​டிங்’ முறை, சுருள் முறை, ஜப்பானியத் தேநீர்ச் சடங்கு​களில் இடம்பெறும் ராக்கு மண் பாண்டத் தொழில்​நுட்பம் போன்றவற்றில் கலைப் பொருள்​களைச் செய்துள்​ளோம். உருவத்தைச் செய்வது, சுடுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் கல்லூரி​யிலேயே செய்தோம். 300 ரூபாயில்​இருந்து பொருள்கள் உள்ளன. விற்பனைப் பொருள்கள் ஒவ்வொன்​றிலும் ஒரே ஒரு மாதிரிதான் உள்ளது” என விற்பனைப் பொருள்​களின் மதிப்பை உணர்த்து​கிறார் செராமிக் பயிலும் மாணவர் யுகேஷ்வரன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x