Published : 26 Jun 2024 07:46 AM
Last Updated : 26 Jun 2024 07:46 AM

ப்ரீமியம்
இடஒதுக்கீடு: உச்ச வரம்பு மட்டுமே அளவுகோலா?

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் அளவை 50%லிருந்து 65% ஆக அதிகரித்த பிஹார் அரசின் நடவடிக்கைக்கு பாட்னா உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பது இடஒதுக்கீடு குறித்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

1992இல் இந்திரா சாஹ்னி எதிர் இந்திய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, மாநில அரசுகளும் மத்திய அரசும் வழங்கும் இடஒதுக்கீட்டுக்கு 50% என்னும் உச்ச வரம்பை நிர்ணயித்தது. தமிழ்நாட்டில் மட்டும் 69% இடஒதுக்கீட்டுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதிஷ் குமார் தலைமையிலான பிஹார் அரசு 2022இல் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தியது. அதன் முடிவுகள் வெளியான பிறகு இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 12%லிருந்து 18% ஆகவும்; மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு (Extremely Backward Castes) 18%லிருந்து 25% ஆகவும்; பட்டியல் சாதியினருக்கு 16%லிருந்து 20%; பட்டியல் பழங்குடியினருக்கு 1%லிருந்து 2% எனவும் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் வகையில் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது பிஹார் அரசு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x