Published : 15 Feb 2024 06:20 AM
Last Updated : 15 Feb 2024 06:20 AM

ப்ரீமியம்
கிளாம்பாக்கம் குளறுபடி: என்ன செய்கிறது அரசு?

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பயணிகள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டிருப்பது போக்குவரத்துத் துறையின் அலட்சியத்தைக் காட்டுகிறது. ஆம்னி பேருந்துகள் நகருக்குள் பயணிகளை ஏற்றி, இறக்கும் நிலையில், அரசுப் பேருந்துகளையும் தற்காலிகமாக அங்கிருந்து இயக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுத்திருப்பதை இந்தச் சாலை மறியல் உணர்த்துகிறது.

சென்னை வண்டலூருக்கு அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பில் ரூ.394 கோடி செலவில் கட்டப்பட்ட, ‘கலைஞர் நூற்றாண்டுப் பேருந்துமுனையம்’ டிசம்பர் 30 அன்று திறக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் என்று அரசு அறிவித்தது. தனியார் ஆம்னி பேருந்துகளையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க உத்தரவிடப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x