Published : 20 Oct 2023 06:10 AM
Last Updated : 20 Oct 2023 06:10 AM

ப்ரீமியம்
வேளாண் மண்டலம்: தேவை முழுமையான பாதுகாப்பு

அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பது அரசின் கடமையாகும். தமிழ்நாட்டில் 2020-2021இல் 1.04 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி இருந்த நிலையில், 2021-22இல் அது 1.22 கோடி மெட்ரிக்டன்னாக அதிகரித்துள்ளது. இதில் பெரும் பங்கு காவிரி டெல்டாவுக்கு உண்டு. அதைப் பாதுகாப்பது அரசின் கடமை என அப்பகுதி மக்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்குப் பிறகு, ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா’ 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இம்மசோதாவில் இரண்டு முக்கியத் திருத்தங்களை டெல்டா எதிர்பார்த்தது: 1. செயல்படுத்தக் கூடாத திட்டங்கள் பட்டியலில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைச் சேர்ப்பது; 2. டெல்டாவின் விடுபட்ட இடங்களைப் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் சேர்ப்பது. இதற்கிடையே, டெல்டாவின் ஒரு பகுதியாக உள்ள அரியலூர் மாவட்டத்தில், காட்டகரம் (2), குறுங்குடி (1), குண்டவெளி (3), முத்துசேர்வமடம் (4) என 10 இடங்களில் எண்ணெய்-எரிவாயு உற்பத்திக் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு, ஓஎன்ஜிசிநிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் 2023 ஜூன்15 அன்று விண்ணப்பித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x