Published : 12 Sep 2023 06:16 AM
Last Updated : 12 Sep 2023 06:16 AM
மகத்தான எழுத்தாளர்களை வாசிப்பது விசேஷ அனுபவம் என்றால், மார்க்கேஸை வாசிப்பது பேரனுபவம். முன்பின் என்ற வரிசை சற்றே குலைந்து, தொடராக நீளும் கச்சிதமான சொற்கள் அமைந்த நீண்ட வாக்கியங்கள், மொழியிலும் பொருளிலுமான அவற்றின் அழகார்ந்த ஒழுங்கமைவு, இவையெல்லாம் சேர்ந்து சிந்தையில் நிகழ்த்தும் மாயம் என எளிதில் விவரித்துவிட முடியாத அனுபவம் அது.
அவரது ‘லிவிங் டு டெல் த டேல்’ நூலை வாசிக்கையில் வரிகளுக்குள் ஆழ்ந்துபோவது, கூறலின் அழகை வியப்பது, பின்னே சென்று கடந்த வரியை மறுபடியும் வாசிப்பது, இப்படியே ஒரே பக்கத்தில் நீண்ட நேரம் லயித்துக் கிடப்பது என அந்த வாசிப்பு போனது. அது காப்ரியல் கார்சியா மார்க்கேஸ் என்ற எழுத்தாளர் வாசகன்மீது நிகழ்த்திய அற்புதம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT