Published : 03 Sep 2023 06:32 AM
Last Updated : 03 Sep 2023 06:32 AM

ப்ரீமியம்
இலக்கியத் திருவிழாக்களும் சிறார் இலக்கியமும்!

தமிழில் சிறார் இலக்கியம் எனும் வகைமை மீது கடந்த சில ஆண்டுகளாகத்தான் தனிக் கவனம் விழத் தொடங்கியுள்ளது. பல்வேறு அமைப்புகள், தாங்கள் வழங்கும் விருதுகளில் சிறார் இலக்கியப் பிரிவையும் இணைத்துள்ளன. சிறார் இலக்கியப் படைப்பாளிகளின் வருகையும் நூல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அரசு, தனியார் அமைப்புகளில் இலக்கியத் திருவிழாக்களிலும் சிறார் இலக்கியத்துக்கான இடம் அளிக்கப்படுவது ஆரோக்கியமான போக்கு. இது பெருமளவில் சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும்.

சமீபத்தில் ‘டர்னிங் பாயின்ட்’ எனும் அமைப்பு முன்னெடுப்பில் மதுரை சிறுவர் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. இந்திய அளவில் புகழ்பெற்ற கதைசொல்லிகளும் சிறார் இலக்கிய எழுத்தாளர்களும் கூடும் வாய்ப்பை இது ஏற்படுத்தியது. கீதா ராமானுஜம், ஜீவா ரகுநாத், பரோ ஆனந்த், ஷோபா விஸ்வநாத், வைஷாலி ஷராஃப், சேவியோ, ரச்சா சஹாப்ரியா, வித்யா தன்ராஜ், மீனு சிவராமகிருஷ்ணன், காயத்ரி, நித்யா, வி அக்கா, அசோக் ராஜகோபாலன், அனுஷா வேலுசாமி, விழியன், கலகல வகுப்பறை சிவா, நான் எனக் கதைசொல்லிகளாலும் எழுத்தாளர்களாலும் களைகட்டியிருந்தது திருவிழா. இவர்களில் பலர் டெல்லி, மும்பை, பெங்களூரு என இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து வந்தவர்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x