Published : 02 Aug 2023 06:18 AM
Last Updated : 02 Aug 2023 06:18 AM

ப்ரீமியம்
நூறு நாள் வேலை: பணியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

நூறு நாள் வேலைத் திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பயனர்கள் பட்டியலிலிருந்து இந்த ஆண்டு 5 கோடிப் பேர் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மக்களவையில் தெரிவித்திருக்கிறார். 2021-22ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால், 2022-23இல் இந்தத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 247% அதிகம் என்பது இது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்திருக்கிறது.

மேற்கு வங்கத்தில் மட்டும் 5,199% கணக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன. தெலங்கானா (2,727%), ஆந்திரப் பிரதேசம் (1,147%), உத்தரப் பிரதேசம் (466%), உத்தராகண்ட் (427%) என நீளும் இந்தப் பட்டியல், இந்தத் திட்டம் செல்லும் திசை குறித்த சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. இது வழக்கமாக மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைதான் என்று கூறியிருக்கும் மத்திய அமைச்சகம், போலியான வேலை அட்டை, வேலைபார்க்க விருப்பமின்மை, தொழிலாளர் இடப்பெயர்வு உள்ளிட்ட சில அம்சங்களை இதற்கான காரணிகளாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. எனினும், சம்பந்தப்பட்ட பயனர்கள், நூறு நாள் வேலைத்திட்ட அட்டையுடன் தங்கள் ஆதார் எண்ணை இணைக்காததுதான் அவர்கள் நீக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x