Published : 22 Jan 2023 08:35 AM
Last Updated : 22 Jan 2023 08:35 AM
குழப்பங்கள், சிரமங்கள்
அரங்குகளின் எண் வரிசையைத் தொடர்வதில் குழப்பம் ஏற்பட்டது. ஒவ்வொரு வரிசையின் முகப்பிலும் பதிப்பகங்களின் பெயர், அரங்கு எண்களைத் தெரிவிக்கும் பதாகைகள் இந்த முறை வைக்கப்படவில்லை. மாறாக அரங்குப் பட்டியல் காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு கேட்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இதனால் எண்களை வைத்து அரங்குகளைக் கண்டறிவது கடினமாக இருந்தது. ஒரு வரிசையிலிருந்து இன்னொரு வரிசைக்கு எளிதாகச் செல்ல முடியாத வகையில் வரிசை முகப்புகளில் தடுப்பு போடப்பட்டிருந்தது. சில வரிசைகளின் முகப்பில் மட்டுமே குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. அரங்குகளுக்குள் போதுமான காற்றோட்டம் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அவ்வப்போது ஒலிப் பெருக்கியின் மூலம் ஏற்பாட்டாளர்கள் அறிவிப்புகள் செய்துகொண்டே இருந்தது புத்தக வெளியீடு, எழுத்தாளர்- வாசகர் உரையாடல் ஆகியவற்றைப் பாதித்தது. நடைபாதை சில இடங்களில் ஏற்ற இறக்கத்துடன் தடுக்கி விழவைப்பதுப் போல் இருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...