Published : 03 Dec 2022 06:47 AM
Last Updated : 03 Dec 2022 06:47 AM
இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை நடைமுறையில் இருந்த கடிதம் எழுதும் பழக்கம், இன்று அரிய ஒரு பண்பாடாக நினைவில் தேங்கிவிட்டது. தொலைத்தொடர்பு அறிவியல் வளர்ச்சி, அதையெல்லாம் மாய்த்துவிட்டது. இந்தப் பின்னணியில் பழைய கடிதங்களைப் புரட்டிப் பார்ப்பது, காலப் பயணம் செய்வதற்கு ஒப்பானது. அக்கடிதங்கள் தமிழகத்தில் இலக்கியவாதிகளுக்கு இடையிலானதாக இருந்தால் இன்னும் அழகானதாக இருக்கும். அப்படியான ஓர் உணர்வைத் தரும் கடிதங்களின் தொகுப்பு இது.
மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன், மறைந்த விமர்சகர் தி.க.சிவசங்கரனுக்கு எழுதிய கடிதங்களை எழுத்தாளர் கழனியூரன் தொகுத்து வெளியிட்ட நூல் இது. 1979 தொடங்கி 1997 வரை தி.க.சிக்கு வ.க. தொடர்ந்து எழுதியிருக்கிறார். இடைப்பட்ட இந்தக் காலத்தின் இலக்கிய நிகழ்வுகள் பலவற்றுக்கும் சாட்சியங்களாக இந்தக் கடிதங்கள் இருக்கின்றன. இந்தக் கடிதம்வழி, வ.க.வின் ஆளுமைச் சித்திரம் நல்ல துலக்கம் பெறுகிறது. புனைவுக்கு ஒத்த லட்சணங்களும் இந்தக் கடிதங்களுக்கு உண்டு. வ.க.வின் நாடோடி வாழ்க்கையும் மறைமுகமாகப் பதிவாகியிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment