Published : 15 Oct 2022 06:27 AM
Last Updated : 15 Oct 2022 06:27 AM
பெரும்பாலான புத்தகக்காட்சிகளில் குழந்தைகளை ஈர்க்கும்படி பல அரங்குகள் அமைந்துள்ளன. அவர்களும் ஆசையாய்ப் புத்தகங்களை எடுக்கிறார்கள்; தொட்டுப் புரட்டுகிறார்கள். விலையைப் பார்த்ததும் அங்கேயே வைத்துவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களின் வாங்கும் சக்தியோடு ஒப்பிடுகையில் குழந்தைகளுக்கான புத்தகங்களின் விலை வெகு தூரத்தில் இருக்கிறது.
இந்தப் பின்னணியில் ‘புத்தகக்காட்சிக்கு நான் ஏன் வர வேண்டும்?’ என்கிற தலைப்பில் ஒரு சிறு நூலைச் சமீபத்தில் நிறைவடைந்த மதுரைப் புத்தகக்காட்சியில் ‘இல்லம் தேடிக் கல்வி’ அரங்கிற்கு வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும் முயற்சியை முன்னெடுத்தோம். அவர்களோடு உட்கார்ந்து வாசிக்கவைத்து கலந்துரையாடலும் நடத்தினோம். 36 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2,200 மாணவர்களைச் சந்தித்ததன்வழி வாசிப்பின் இடர்களை அறிய முடிந்தது. அரசுப் பள்ளிக் குழந்தைகள் எந்தெந்த அரங்குகளுக்குள் நுழைகிறார்கள் என்பதைக் கவனித்தோம். இந்தச் செயல்பாடுகளில் ஆசிரியர்கள் முத்துக்குமாரி, ராணி குணசீலி ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். மதுரை புத்தகக்காட்சியில் பேய்க்கதைகள், புரூஸ் லீ, பகத்சிங் எனப் பிடித்த புத்தகங்களை வாங்கிய குழந்தைகளிடம் பேசினோம். புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் சிறார்களுக்கான வழிகாட்டுதலைப் பெரியவர்களான நாம் தரவில்லை என்றே சொல்ல வேண்டும். தற்காலச் சிறார் இலக்கிய உலகம், பள்ளிக் குழந்தைகளிடமிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது என்பதே நிதர்சனம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT