Published : 08 Oct 2022 07:18 AM
Last Updated : 08 Oct 2022 07:18 AM
புலியூர்க் கேசிகன், நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்களுக்குத் தெளிவுரை எழுதியவர். தமிழ் ஆசிரியர், பதிப்பாசிரியர், ஆய்வறிஞர், சோதிட அறிவியல் விற்பன்னர் எனப் பல முகங்கள் உடையவர். நல் தமிழ் இலக்கியங்களை மக்களிடத்தில் சேர்த்ததில் இவரது பங்குப் போற்றத்தக்கது.
புலியூர்க் கேசிகனின் இயற்பெயர் க.சொக்கலிங்கம். திருநெல்வேலிக்கு அருகில் புலியூர்க்குறிச்சியில் பிறந்தவர். இவரது குடும்பம் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டது. தொடக்கநிலைக் கல்வியை, அருகில் இருந்த டோனாவூரிலும் உயர்கல்வியைத் திருநெல்வேலியில் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். அந்தக் காலகட்டத்தில் தீவிரமாக நடைபெற்றுவந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கேசிகனார் கலந்துகொண்டார். தமிழறிஞர்கள் மு.வரதராசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு.வி.கல்யாணசுந்தரனார் ஆகியோருடனான நட்பு கேசிகனாரின் தமிழ்ப் பசிக்கு நல் விருந்தானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment