இலக்கியம்
சீரிய இலக்கிய இதழ் | சிற்றிதழ் அறிமுகம்
மணல்வீடு இதழின் இந்தாண்டுக்கான முதல் இதழ் வந்துள்ளது. அயல் மொழி இலக்கியங்களுடன் தமிழ்ப் படைப்புகளும் இந்த இதழுக்கு வலுச்சேர்க்கிறது. கவிஞர் பிரம்மராஜன் பிரெஞ்சு மார்டினிக்வாய்ஸ் கவிஞர் எமி சிசர் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அவரது கவிதைகளும் இத்துடன் மொழிபெயர்க்கப்படுள்ளன. க.நா.சு.வின் ‘ஒருநாள்’நாவல் மீது நஸீமா பர்வீனின் கட்டுரை திடமான விமர்சனத்தை முன்வைக்கிறது. சதக் ஹசன் மாண்டோவின் சிறுகதை, மு.இக்பால் அகமது மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது.
