Last Updated : 21 Mar, 2025 06:33 AM

1  

Published : 21 Mar 2025 06:33 AM
Last Updated : 21 Mar 2025 06:33 AM

கண்ணன் வந்த நேரம் - நாடக விமர்சனம்

‘கண்ணன் வந்த நேரம்’ நாடகத்தில் ஒரு காட்சி.

‘இந்த நாடகத்​தில் வரும் சில நிகழ்ச்​சிகள், பொது​வாக நம் நாட்​டில் நடை​பெறும் சில சம்​பவங்​களை அடிப்​படை​யாக வைத்து கற்பனை​யுடன் சேர்த்து எழுதப்​பட்​டது. யாரை​யும், எந்த தரப்​பினரை​யும், அமைப்​பு​களை​யும் குறிப்​பிடு​பவை அல்ல என்​பதை பணிவன்​போடு தெரி​வித்​துக் கொள்​கிறோம்’ - என்ற பொறுப்பு துறப்பு வரும்​போதே நிமிர்ந்து உட்​கார வைக்​கிறது நாடகம்.

ஆன்​மிக சொற்​பொழி​வாளர் சுந்​தர​ராஜ பாகவதரிடம் நீண்​ட​கால​மாக இருக்​கும் ஒரு கண்​ணன் பொம்​மை, அரசி​யல்​வா​தி​யான பாண்​டியனின் வீட்​டுக்கு வந்​து​விடு​கிறது.

அதன்​பிறகு, பாண்​டியனின் வாழ்க்​கை​யில் பல திருப்​பங்​கள் ஏற்​படு​கின்​றன. நாத்​தி​க​ரான பாண்​டியனுக்கு கடவுள் நம்​பிக்கை வந்​த​தா? திரு​மண​மாகி குழந்​தைப் பேறுக்​காக பல காலம் காத்​திருக்​கும் இவர்​களுக்கு மழலை செல்​வம் கிடைத்​த​தா? எனும் கேள்வி​களுக்கு பதில் சொல்​கிறது நாடகம்.

கட்சி மாறும் அரசி​யல்​வாதி மூல​மாக, புதிய கட்​சிகளை​யும்​கூட கலாய்க்​கிறார் நாடகத்தை எழு​தி, இயக்​கி​யுள்ள குடந்தை மாலி. போலி பகுத்​தறி​வு​வாதம், போலி பக்​தி, ஆன்​மிக அரசி​யல் ஆகிய​வற்றை தனக்கே உரிய தைரி​யத்​தோடு விமர்​சிக்​கும் 90 வயது இளைஞ​ரான அவரது தீரத்தை பாராட்​டியே ஆகவேண்டும்.

பகுத்​தறிவு கட்​சியை சேர்ந்த பாண்​டியனும் (கணேஷ்.ஜி), அவரது மனைவி கயல்​விழி​யும் (நாஞ்​சில் ரேவ​தி) மொத்த நாடகத்​தை​யும் தாங்​கிப் பிடிக்​கின்​றனர். உறுத்​தாத ஒளி, ஒலியை வழங்​கு​கிறார் கலை​வாணர் கிச்​சா. அரங்க அமைப்​பும், நாடகத்​தில் இடம்​பெறும் பாடல்​களும் ரசனை. ‘அரசி​யல்​வா​தி​களே இப்​படித்​தான்’ என்​பது​போலவே நாடகம் முழு​வதும் காட்​டு​வதும், டாக்​ட​ராக வருபவர் திடீரென சுந்​தர​ராஜ பாகவத​ராக மாறி ஆன்​மிக சொற்​பொழி​வு நிகழ்த்​து​வதும்​ நெருடல்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x