Published : 24 Aug 2024 06:30 AM
Last Updated : 24 Aug 2024 06:30 AM
தோற்றத் தொன்மை, தொடரும் இளமை என்ற இரண்டு பெருமிதங்களையும் ஒருங்கே கொண்ட தமிழின் இந்தச் சிறப்பியல்பை உணர்ந்து, உள்வாங்கி, யுகபாரதி செதுக்கியுள்ள சிறந்த படைப்பு ‘மேல் கணக்கு’. தமிழுக்குள் வேரும் விழுதுமாகத் தொடரும் அழகியலை, தனித்துவமான சில கருத்தியல்களை, சொல்லாட்சிகளின் பெருமிதத்தோடு மீள்வாசிக்கிறார் யுகபாரதி. அதன் பயனாகவே இந்நூல் தமிழுக்குக் கிடைத்துள்ளது.
தன் நெஞ்சில் உணர்ந்த பெருமிதத்திற்குப் பின்வருமாறு சொல்வடிவம் கொடுத்திருக்கிறார் யுகபாரதி, ‘யாரோ எட்டி உதைத்து, இலக்கியக் கடலுக்குள் விழுந்தவன் கைநிறைய முத்துக்களுடன் கரைசேர்ந்ததுபோல் இருக்கிறது. பூமிப்பந்தின் மேலே ஓர் இறகுபோலப் பறக்கும் பாக்கியத்தைச் சங்கப் பாடல்கள் வழங்குகின்றன. ஓரிரு சொற்களின் உள்பொருளைக் கண்டதுமே அவை கண்திறந்த காகிதச் சிலைகளாக எனக்குத் தோன்றின’ என்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment