Published : 27 Jul 2024 06:30 AM
Last Updated : 27 Jul 2024 06:30 AM
காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் முசிறி. எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் பிறந்த ஊர். ஊருக்கு வெளியே ஆற்றின் கரையில் இயங்கி வந்தது அரசு நூலகம். அந்த நூலகக் கட்டிடம் காலத்தால் சிதிலமடைந்தபோது, அதே இடத்தில் அதைப் புதுப்பிக்கும் முயற்சிகளை நூலகரும் நூலகத் துறையும் மேற்கொண்டு வருவதை அறிந்த உள்ளூர் மக்கள், முசிறியில் இயங்கும் ‘களம்’ இலக்கிய அமைப்பின் மூலம் ஒரு குறுக்கீடு செய்தார்கள்.
ஊரின் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு, நூலகம் விரிவாக்கப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருந்தது. மக்களின் விருப்பத்துக்கு உயிரூட்டிச் செயல் வடிவம் கொடுக்க எப்போதும் ஓர் அமைப்பு அல்லது இயக்கம் தேவைப்படும். அந்த இடத்தில் தன்னார்வமாக வந்துநின்றது முசிறியின் ‘களம்’ இலக்கிய அமைப்பு. ஊராட்சியாக இருந்த முசிறி, இன்று நகராட்சி ஆகிவிட்டது. நகராக விரிவு கொண்டுவிட்டதைக் கவனத்தில் கொண்ட ஒரு புதிய நூலகம் தேவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment