Published : 27 Jul 2024 06:18 AM
Last Updated : 27 Jul 2024 06:18 AM

ப்ரீமியம்
நூல் நயம்: துரைமார்கள் பேசிய தமிழ்

அந்நிய மண்ணைத் தங்களது ஆளுகையின்கீழ்க் கொண்டுவர அங்கு பேசப்படும் மொழிகளை ஆக்கிரமிப்பாளர்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பது வரலாற்றினூடாக ஆங்காங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளது. ‘வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும்’ (மொழியில் உதித்த பேரரசு) நூல், ஆங்கிலேயர்களுக்கும் தமிழ் மொழிக்குமான தொடர்பைப் பல்வேறு ஆவணச் சான்றுகளுடன் விவரிக்கிறது. பயன்பாட்டு நோக்கிலான தொடர்பு, பின்னாள்களில் சில ஆங்கிலேயர்களுக்கு உறவாகவே வளர்ந்ததும் இதில் பேசப்பட்டுள்ளது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் ந.கோவிந்தராஜன் இந்நூலை எழுதியுள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பின்னர், மற்ற பாளையக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கத்துடன் மேஜர் பானர்மென் அனுப்பிய சுற்றறிக்கை, பேச்சுத் தமிழிலேயே அமைந்திருந்தது. இந்த உத்தரவைத் தாங்கிய செப்பேட்டில் தொடங்கும் இந்நூல், ஆங்கிலேயர்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக எழுதிய சொற்பட்டியல்களையும் நூல்களையும் முன்வைத்து, அவர்கள் நாக்கில் தமிழ் புழங்கிய விதத்தைக் கூறுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x