Published : 13 Jul 2024 06:18 AM
Last Updated : 13 Jul 2024 06:18 AM
கலைஞன் என்பவன் காலத்தால் அழியாதவற்றைப் படைப்பவன். அப்படி ஒரு பன்முகத் தன்மை கொண்ட கலைஞர்தான், மு.கருணாநிதி. அரசியல், இலக்கியம், திரைத் துறை, ஆட்சி நிர்வாகம் என எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் இவரின் தரிசனம் கிடைக்கும். கருணாநிதியின் புத்தகங்கள் மட்டுமல்ல, அவரைப் பற்றியும் பல்வேறு புத்தகங்கள் வந்துள்ளன. அந்த வகையில் நா.சுலோசனா எழுதியுள்ள ‘திரைவானில் கலைஞர்’ என்னும் நூல் வெளிவந்துள்ளது.
கருணாநிதி வசனம் எழுதத் தொடங்கிய ‘ராஜகுமாரி’ முதல் (உண்மையில் அவரது முதல் படம் ‘அபிமன்யு’. ஆனால், ராஜகுமாரி முதலில் வெளியானதால் அதுவே முதல் படமானது) கடைசிப் படமான ‘பொன்னர் சங்கர்’ வரையிலும் அவரது படைப்பை ஆய்வு செய்து, தகவல் திரட்டி ஒரு நூலாகக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. அந்தப் பணியைத் திறம்படச் செய்து, திரைத் துறையில் கருணாநிதி என்னவெல்லாம் செய்தார் என்பதைக் கையடக்க நூலில் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூலாசிரியர். புராணக் கதையைப் பின்னணியாகக் கொண்டே பெரும்பாலான படங்கள் வெளிவந்த காலகட்டத்தில், அதை உடைத்துப் புதிய பரிமாணங்களுடன் சமூகக் கருத்துள்ள மாற்றுக் கதைக்களம் கொண்ட படங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்ததில் கருணாநிதியின் பங்கு மகத்தானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment