Published : 22 Jun 2024 08:53 AM
Last Updated : 22 Jun 2024 08:53 AM

ப்ரீமியம்
நூல் நயம்: வரலாற்றின் புதுச் சுவை

வரலாற்றின் புதுச் சுவை: தமிழின் முதல் நாவலென 1879இல் எழுதப்பட்ட ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ சொல்லப்படும் நிலையில், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டது ‘மதீனத்துந் நுஹாஸ்’ எனும் ‘தாமிரப்பட்டணம்’ நாவல். இந்த நாவல் ‘அர்வீ’ எனப்படும் அறபுத் தமிழில் எழுதப்பட்டது. 1858இல் நாவல் எழுதப்பட்டாலும் 1899இல்தான் அச்சு வடிவத்தில் நூலானது. பின்னர் 1979இல் நவீனத் தமிழ் வரிவடிவில் வெளியானது. தொடக்கக் காலத் தமிழ் எழுத்துகளில் அச்சிடப்படாததாலும், தமிழின் முதல் நாவல் வெளியான 20 ஆண்டுகள் கழித்தே அச்சானதாலும், அறபி மொழி நெடுங்கவிதை ஒன்றின் மொழியாக்கம் என்பதாலும் இதனைத் தமிழின் முதல் நாவல் என ஏற்க முடியாது என்போரின் வாதங்களுக்குத் தர்க்கரீதியான பதில்களைத் தந்துள்ளார் ஆய்வாளர் பழங்காசு சீனிவாசன். கால வெள்ளத்தால் அழிந்துபோன கடந்த காலங்களின் வரலாற்று நிகழ்வுகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் பேரார்வத்தில் எழுதப்பட்ட செய்யுள்களைத் தமிழில் வசனமாகப் படிக்கையில் கிடைக்கும் புதுசுகம் அலாதியானது என்பதை ‘தாமிரப்பட்டண’த்தை வாசிக்கும் வாசகரால் உணர்ந்துகொள்ள முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x