Published : 08 Jun 2024 06:15 AM
Last Updated : 08 Jun 2024 06:15 AM
வளம் மிக்க குமரி மாவட்டத்தில் அருவிகளுக்குப் பஞ்சமில்லை. சிறிய நிலப்பகுதி என்பதால், அருவிகளை எளிதில் அடைந்துவிட முடியும். ஆனால் இப்போது அணைக்கட்டுகள், மக்கள் பெருக்கம், காடழிப்பு போன்றவற்றால் பல அருவிகளுக்குச் செல்வதற்குத் தடை ஏற்பட்டுள்ளது. நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ‘சம்பந்தம்’ என்கிற முறையில் தங்களுக்கு என்று பொதுவான மனைவியை வைத்திருந்தனர். 1788இல் கள்ளிக் கோட்டைக்கு வந்த திப்பு சுல்தான், இந்தப் பழக்கத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
‘இனிமேல் இந்தச் செயலை யாரும் செய்யக் கூடாது’ என்று கட்டளையிட்டார். குமரி மக்களுக்குப் பிடித்த மரம் தென்னை. வீட்டைச் சுற்றித் தென்னை மரங்கள் இருப்பதால், அவர்கள் கடையில் தேங்காய் வாங்க மாட்டார்கள். அதனால், அந்தக் காலத்தில் கடைகளில் தேங்காய் கிடைக்காது. இப்படி குமரி மாவட்ட மக்களின் சமூக, அரசியல், பண்பாட்டு வரலாற்றைப் பேசும் இந்த நூலை கன்யூட்ராஜ், தன் அனுபவங்களுடன் சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறார். - எஸ்.சுஜாதா
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment