Published : 18 May 2024 06:10 AM
Last Updated : 18 May 2024 06:10 AM
அரங்க உத்திகளை நவீனமயப்படுத்தியது, பல காலமாக நிகழ்த்தப்பட்டு வந்த நாடகப் பிரதிகளைச் சீர்திருத்தி, எளிமைப்படுத்தி மீள் பதிப்பித்தது, பலவற்றை நிகழ்த்தியது என்று மட்டுமே பம்மல் சம்பந்தனாரை இன்றைய கலையுலகம் நினைவில் நிறுத்தியிருக்கிறது.
இவ்வாறு வெறும் நாடகப் பனுவல் படைப்பாளியாக அவரைச் சுருக்கிவிடாமல், ‘நாடக வரலாற்று ஆராய்ச்சியாளர்’, ‘19ஆம் நூற்றாண்டின் அரங்க நடிப்பு முறையியல் கோட்பாட்டாளர்’ ஆகிய அவரது முக்கிய நாடக ஆளுமைப் பண்புகளை இந்நூல் நமக்கு மீள் அறிமுகம் செய்கிறது. ஆராய்ச்சியாளர்கள்கூடத் தவறவிட்ட இந்தக் கோணத்தை, சம்பந்தனாரின் ஐந்து விரிவான கட்டுரைகளைச் சரியான அளவில் தொகுத்துக் கொடுத்திருப்பதன் வழியாக இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார், இந்நூலைப் பதிப்பித்துள்ள பேராசிரியர் கோ.பழனி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment