Published : 14 Oct 2023 06:20 AM
Last Updated : 14 Oct 2023 06:20 AM

ப்ரீமியம்
நூல் வெளி: நவீன தமிழ்த் தேசியத்தின் இலக்கியம்

குமாரசெல்வா

குமாரசெல்வாவின் ‘காக்காம்பொன்’ தொகுப்பில் உள்ள கதைகள் தனித் தனியாகவோ, இணைத்தோ வாசிப்பதற்கான சுவாரசியத்தையும், புதிய அறிதல் சாத்தியங்களையும் வழங்குகின்றன. குறிப்பிட்ட கால, பகுதிசார் தன்மையையும் உலகளாவிய தன்மையையும் ஒருசேரப் பண்புருக்களாகக் கொண்டிருக்கின்றன இந்தக் கதைகள். வர்க்கம், சாதி, பாலினம், மதம், அரசியல், ஆன்மிகம், வாழ்வு, மரணம் ஆகியவை சார்ந்து நடக்கும் எழுத்து விசாரணையில், குமாரசெல்வாவின் அராவுதல் எல்லைகளைக் கடந்த ஒரு மெய்த்தேடலைத் துழாவுகின்றன.

‘ஒரு வாளி சாம்பார்’, ‘நார்க்கட்டில்’, ‘அமர விளை’, ‘வெனிலா’, ‘காக்காம்பொன்’ ஆகிய ஐந்து கதைகளுக்குள்ளும் பொதுவான அம்சங்களும் தனிச்சிறப்பான கூறுகளும் உள்ளன. பொதுவான அம்சமாகக் கதாபாத்திரங்களில் வெளிப்படும் வர்க்கப் பின்னணியைக் குறிப்பிடலாம். பெரும்பாலான கதாபாத்திரங்கள் அடித்தட்டுவர்க்க மனிதர்கள். இவர்கள் மத்தியதரவர்க்கத்தினரால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ‘நார்க்கட்டில்’ கதையில் வரும் திருப்பதி, ஆசிரியையான தன் சகோதரியாலும், அவள் கணவன் குடும்பத்தினராலும் தெருவுக்குத் தள்ளப்படுவதைச் சுட்டிக்காட்டலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x