Published : 23 Sep 2023 06:10 AM
Last Updated : 23 Sep 2023 06:10 AM
தமிழ்க் கவிதைப் பரப்பில், முன்னை மரபுக்கும் பின்னை புதுமைக்கும் பாலமாக இன்றைக்கும் எழுதிக் கொண்டிருப்பவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் பிறந்த ந.ஜெகதீசன், கல்லூரியில் படிக்கிற நாள்களிலேயே தமிழன்பன் எனும் புனைபெயரில் கவிதைகளை எழுதினார். பின்னாளில் மு.கருணாநிதியின் தலைமையிலான கவியரங்கில் பங்கேற்கையில், ‘ஈரோடு தமிழன்பன்’ எனக் கருணாநிதி அழைக்கவே, அதுவே பின்னாளில் பெயராக நிலைத்தது.
பாவேந்தரின் சீடர்: சென்னிமலையிலுள்ள தொடக்கப் பள்ளியில் படித்தபோது, பாரதியின் கவிதை நூல்களைப் படித்தவருக்கு, கவிதையெழுதும் ஆர்வம் இயல்பாக எழுந்தது. அப்போதே புனைபெயர்களில் எழுதத் தொடங்கியதோடு, ‘சுய சிந்தனை’ எனும் கையெழுத்து இதழினையும் நடத்தத் தொடங்கினார். கரந்தைப் புலவர் கல்லூரின் மாணவராக இருந்த தமிழன்பனுக்கு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘இசை அமுதம்’, ‘அழகின் சிரிப்பு’ நூல்களைப் படித்த பிறகு, பாரதிதாசனின் கவிதைகள் மேல் கவனம் குவிந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT