Published : 17 Feb 2024 06:10 AM
Last Updated : 17 Feb 2024 06:10 AM

பசியால் வாடிய முதியவருக்கு மருத்துவமனை செவிலியர் உதவி

முதியவருக்கு உதவி செய்த செவிலியர்.

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அரசு மருத்துவமனை அருகே மயங்கி விழுந்த முதியவருக்கு செவிலியர் உணவு வழங்கினர். சிங்கம்புணரி அரசு மருத்துவமனை அருகே நேற்று காலை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து அங்கிருந்தோர் மருத்துவ மனையில் இருந்த செவிலியர்களிடம் தெரி வித்தனர். அவர்கள் விரைந்து வந்து முதியவருக்கு சிகிச்சை அளித்தனர். மயக்கம் தெளிந்த முதியவர், பசியால் மயக்கம் அடைந்ததாக கூறினார். இதையடுத்து செவிலியர் முதியவருக்கு உணவு, டீ வாங்கி கொடுத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x