Published : 31 May 2023 08:27 AM
Last Updated : 31 May 2023 08:27 AM

மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: டெல்லியில் ஆளும் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 2021-22 நிதியாண்டுக்கு புதிய மதுக்கொள்கையை கொண்டுவந்தது. இதில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்தனர். இதையடுத்து சிசோடியாதனது பதவியை ராஜினாமா செய்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது மனு கடந்த மார்ச் 31-ம்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா, சிசோடியாவின் ஜாமீன் மனுவை நேற்று நிராகரித்து தீர்ப்பு வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x