Published : 28 Apr 2023 05:35 AM
Last Updated : 28 Apr 2023 05:35 AM

காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் மீது அவதூறு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு

போபால்: மத்திய பிரதேசத்தில் உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசுப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. வியாபம் ஊழல் என்று அழைக்கப்படும் இந்த முறைகேடு கடந்த 2013-ல் ம.பி.யை உலுக்கியது.

ம.பி. மாநில பாஜகவின் தற்போதைய தலைவரான வி.டி.சர்மாவுக்கு இதில் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியிருந்தார். அவருக்கு எதிராக வி.டி.சர்மா கடந்த 2014-ல்அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் திக்விஜய் சிங் மீது போபால் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை ஜூலை 1-ம் தேதிக்கு, நீதிபதி விதான் மகேஸ்வரி ஒத்தி வைத்தார். அவதூறு வழக்கில் ராகுல்எம்.பி பதவி பறிபோன நிலையில் எம்.பி திக்விஜய் சிங் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x