Published : 22 Apr 2023 04:15 PM
Last Updated : 22 Apr 2023 04:15 PM

பிஎஸ்எல்வி சி-55 மூலம் சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூரின் இரண்டு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

வர்த்தக நோக்கில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் இந்தியாவின் நியூஸ்பேஸ் இந்தியா லிட். நிறுவனம், சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு ஏற்ப ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூரின் இரண்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டன.

டெலியோஸ்-2 எனும் பிரதான செயற்கைக்கோள் பூமியை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொறு துணை செயற்கைக்கோளான லூமிலைட்-4, தொழில்நுட்ப செயற்கைக்கோளாகும். இந்த இரு செயற்கைக்கோள்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 2.19 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்கிய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x