Published : 21 Apr 2023 10:41 AM
Last Updated : 21 Apr 2023 10:41 AM

இந்தியாவில் 11,692 பேருக்கு கோவிட் தொற்று: நேற்றைவிட சற்றே குறைவு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,692 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோவிட் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 66,170 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கோவிட் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை: 11,692.

தற்போது நாடு முழுவதும் கோவிட் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை: 66,170.

இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை: 4,48,69,684 (4.48 கோடி)

கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் ஆனோர் எண்ணிக்கை: 10,827

இதுவரை கோவிட் தொற்றிலிருந்து மீண்டு வந்தோரின் எண்ணிக்கை: 4,42,72,256.

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை: 28.

இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை: 5,31,258.

இதுவரை நாடு முழுவதும் 220.66 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x