

திருவனந்தபுரம்: 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் 24-ம் தேதி கேரள மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு 24-ம் தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் மிகப்பெரிய வரவேற்பை அளிக்க மாநில பாஜக முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து 25-ம் தேதி கேரளாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கொச்சியில் 24-ம் தேதி மாபெரும் பேரணியை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. ஆனால் இதில், பிரதமர் மோடி பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் பேரணியில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் பங்கேற்கவுள்ளனர்.