Published : 24 Jul 2014 08:32 AM
Last Updated : 24 Jul 2014 08:32 AM

மூன்று வயது சிறுவன் மீது ஆசிரியை கொடூரத் தாக்குதல்: வீடியோ வெளியானதால் பரபரப்பு

கொல்கத்தாவில் 3 வயது சிறுவனை டியூஷன் ஆசிரியை கொடூரமாக அடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது.

ஆந்திராவில் பார்வைக் குறைபாடுள்ள மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் கடுமையாக அடித்து உதைத்த வீடியோ வெளியான மறுநாளே 3 வயது சிறுவனை ஆசிரியை அடித்த வீடியோவும் வெளியாகியுள்ளது.

கொல்கத்தாவில் செவ்வாய்க் கிழமை இந்த சம்பவம் நிகழ்ந் துள்ளது. வீட்டுக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக அப்பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சிறுவனை அடித்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ பதிவு தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பானது.

இது தொடர்பாக சிறுவனின் குடும்பத்தினர் போலீஸில் புகார் தெரிவித்தனர். சிறுவனை கொடூரமாக அடித்த அந்த ஆசிரியையை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சிறுவனை அடித் ததற்காக அவனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட அந்த ஆசிரியை, போலீஸில் புகார் தெரிவிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த ஆசிரியையின் கணவர் வந்து போலீஸில் புகார் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் தெரிவித்தனர்.

சில நாள்களுக்கு முன்புதான் அந்த டியூஷன் ஆசிரியையை நியமித்ததாக சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x