Published : 10 Apr 2023 11:39 AM
Last Updated : 10 Apr 2023 11:39 AM

இந்தியாவில் 5,880 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: மொத்தமாக 35,199 பேர் பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுகிழமை) ஒரே நாளில் புதிதாக 5,880 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 35,199 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 5,880 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 35,199 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 96 ஆயிரத்து 318 ஆக உள்ளது.

கோவிட் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லி, இமாச்சலப் பிரதேசத்தில் தலா 4 பேர், குஜராத், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 1 ஒருவர், கேரளாவில் 2 பேர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கோவிட் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், நாட்டின் பல நகரங்களில் கரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, ஹரியாணா, கேரளா, உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, டெல்லியிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x