Published : 05 Apr 2023 07:01 AM
Last Updated : 05 Apr 2023 07:01 AM

காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் 30 பேரை கொல்லப் போவதாக காஷ்மீரை சேர்ந்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட்’ (டிஆர்எப்) என்ற தீவிரவாத குழு பட்டியல் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் பினாமி அமைப்பாக டிஆர்எப் கருதப்படுகிறது. இந்த அமைப்புக்கு மத்திய அரசுதடை விதித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தனது அகண்ட பாரதம் குறித்த யோசனையை வெளிப்படுத்திய 3 நாட்களில் டிஆர்எப் இந்த மிரட்டலை விடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின்மூத்த அதிகாரி ஒருவர் நேற்றுகூறும்போது, “ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் முஸ்லிம் தலைவர்களை டிஆர்எப் அச்சுறுத்தியுள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x