Published : 17 Mar 2023 09:49 PM
Last Updated : 17 Mar 2023 09:49 PM
நுழைவாயில்: காட்சி - 1: 2022-ம் ஆண்டு மார்ச் மாத இறுதி: பத்திரிக்கை ஒன்றின் விருது வழங்கும் விழாவில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான நிதின் கட்கரி, “ஜனநாயகத்திற்கு வலுவான காங்கிரஸ் கட்சி அவசியம். காங்கிரஸ் வலுவிழந்தால் எதிர்க்கட்சி இடத்தை மாநிலக் கட்சிகள் பிடித்துவிடும்” என்று தெரிவித்திருந்தார். கட்கரியின் பேச்சு அன்று தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது.
தொடர் தேர்தல் தோல்விகளால் துவண்டு கிடந்த காங்கிஸ் கட்சிக்கு ஆறுதலாக கட்கரியின் பேச்சு இருந்திருக்கலாம். (அப்போது காங்கிரஸில் உள்கட்சி தேர்தல் நடந்திருக்கவில்லை. ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரை பற்றிய பேச்சே இல்லை) ஆனால், பாஜகவுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்திருக்கும். ‘தங்களின் பரம எதிரிக்காவும் பரிந்து பேசும் கட்சி தான் பாஜக’ என பாராட்டு கிடைக்கும் என கட்கரியும் பாஜகவும் நினைத்திருக்கலாம். ஆனால், நடந்ததோ வேறொன்று... பிராந்திய கட்சிகளைப் பார்த்து பாஜக பயப்படுகிறதா என்ற பரபரப்பு அரசியல் வட்டாரங்களில் தொற்றிக்கொள்ளத் தொடங்கியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. காங்கிரஸ் வலுவிழக்கிறது என்ற உண்மையை போலவே, பிராந்திய கட்சிகள் பலம் பெருகின்றன என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை. கட்கரியின் கரிசனம் (!) யாருக்கு புரிந்ததோ இல்லையோ.. மோடிக்கு நன்றாகவே புரிந்தது என்றே தோன்றுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...