Published : 15 Jul 2014 10:48 AM
Last Updated : 15 Jul 2014 10:48 AM
ஆந்திரா-தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களின் பொது தலை நகரமாக விளங்கும் ஹைதராபாத் விரைவில் வைபை நகரமாக மாற உள்ளது.
இது தொடர்பாக திங்கள் கிழமை மாலை மைக்ரோ சாப்ட்வேர் இந்தியாவின் தலைவர் பாஸ்கர், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவை சந்தித்தார்.
இருவரும் சுமார் 45 நிமிடங்கள் உரையாடினர். அப்போது, மைக்ரோசாப்ட் நிறுவன விரிவாக்கம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் இங்குபேடர், டாஸ்க், மற்றும் வைபை ஆகியவை அமைப்பதில் மைக்ரோசாப்ட்வேர் நிறுவனம் ஆர்வமாக உள்ளதாக முதல்வரிடம் பாஸ்கர் தெரிவித்தார்.
இது குறித்து அடுத்த மாதம் 6-ம் தேதி மீண்டும் பேசி இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT