Published : 04 Dec 2022 07:24 AM
Last Updated : 04 Dec 2022 07:24 AM

விமானப் படை போக்குவரத்து பிரிவில் ஏ என்-32-க்கு மாற்றாக நவீன சி-295 ரக விமானம்: இந்திய விமானப்படை பரிசீலனை

புதுடெல்லி: வீரர்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் பழைய ஏஎன்-32 ரக விமானங்களுக்கு மாற்றாக நவீனசி-295 ரக விமானங்களை வாங்குவது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது.

இந்திய விமானப்படையில் 1960-ம் ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட ஆவ்ரோ-748 ரக விமானங்களுக்கு பதிலாக 56 புதிய விமானங்களை சேர்க்க பாதுகாப்பு கொள்முதல் அமைப்பு கடந்த 2012-ம் ஆண்டுஒப்புதல் வழங்கியது. இதையடுத்து56 சி-295 ரக விமானங்களை ஏர்பஸ் நிறுவனம், டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ.21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்நிலையில் விமானப்படையில் உள்ள ஏன்-32 ரக போக்குவரத்து விமானங்களுக்கு மாற்றாக,சி-295 விமானங்களை கொள்முதல்செய்வது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது.

விமானப்படையில் வீரர்களை மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு ஆன்டனோவ்-32 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சுருக்கமாகஏஎன்-32 என அழைக்கப்படுகிறது. இந்த விமானங்கள் 2030-க்குள்விமானப்படை பணியிலிருந்துவிடுவிக்கப்படும்.

இந்திய விமானப்படையில் தற்போது 90 ஏஎன்-32 ரக விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் லடாக் மற்றும் வடகிழக்கு எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினரை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விமானங்களுக்கு சரியான மாற்றாக சி-295 விமானங்கள் இருக்கும் என இந்திய விமானப்படை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால், இந்தியாவில் சி-295 ரக விமானங்களின் தயாரிப்பு தொடர்வதையும் உறுதி செய்ய முடியும் எனவும் இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விமானங்கள் லடாக், வடகிழக்கு எல்லையில் பாதுகாப்பு படையினரை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x