Published : 11 Nov 2022 05:13 AM
Last Updated : 11 Nov 2022 05:13 AM

முலாயம் சிங் தொகுதி இடைத்தேர்தல்: அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டி

லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 10-ம் தேதி காலமானார். இதனால் காலியான அவரது மெயின்புரி மக்களவைத் தொகுதிக்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதி வேட்பாளராக முலாயம் மருமகளும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் (44) பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ல் பெரோஸாபாத் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிம்பிள் யாதவ், நடிகர் ராஜ் பப்பரிடம் தோல்வி அடைந்தார்.

2012-ல் அகிலேஷ் உ.பி. முதல்வர் ஆனதால் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவரது கன்னோஜ் தொகுதியில் டிம்பிள் போட்டியின்றி தேர்வானார். 2014-ல் கன்னோஜில் மீண்டும் வெற்றி பெற்ற டிம்பிள், 2019-ல் அங்கு பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x