Published : 31 Jul 2022 05:40 AM
Last Updated : 31 Jul 2022 05:40 AM

ஆளுநர் தமிழிசையுடன் இஸ்ரோ விஞ்ஞானி ஆலோசனை

புதுச்சேரி: பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி (இஸ்ரோ) மையத்தின் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி இஸ்ரோ நிறுவனம் மாணவர்கள் உருவாக்கிய 75 சிறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது.

அதில், புதுச்சேரி சார்பில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு ஒரு செயற்கைக்கோள் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆளுநர் முன்னிலையில் விஞ்ஞானி சிவதாணுபிள்ளையுடன் ஆளுநர் தமிழிசை தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன், விஞ்ஞானி கோகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x