Published : 08 Jul 2022 05:23 AM
Last Updated : 08 Jul 2022 05:23 AM

குண்டு வெடித்து தந்தை மகன் உயிரிழப்பு - கண்ணூரில் சோகம்

கண்ணூர்: கேரள மாநில போலீஸார் நேற்று கூறியதாவது:

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பசல் ஹக் மற்றும் அவரது மகன் ஷஹீதுல் ஆகிய இருவரும் கண்ணூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். இவர்கள் பழைய இரும்பு பொருட்களை சேகரித்து விற்று வந்துள்ளனர். பழைய பொருட்களில் இருந்த ஒரு டிபன் பாக்ஸை திறந்தபோது பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில், பசல் ஹக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஷஹீதுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த வீட்டில் 5 பேர் தங்கியிருந்துள்ளனர். எனினும், சம்பவம் நடந்தபோது 3 பேர் வெளியில் சென்றதால் அவர்கள் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x