Published : 15 Apr 2022 06:27 AM
Last Updated : 15 Apr 2022 06:27 AM

ம.பி. மசூதிகளில் சிசிடிவி கேமராக்கள் - அமைச்சர் வரவேற்பு

போபால்: மத்தியப் பிரதேசத்தின் கர்கான் மாவட்டத்தில் ராம நவமி ஊர்வலம் நடைபெற்ற போது வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில் முஸ்லிம் தலைவர்கள் குழுவினர் போபால் ஷேர் குவாசி, சையத் முஸ்தக் அலி தலைமையில் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.

அப்போது, மசூதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறும்போது, ‘‘மசூதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த, மேற்கொண்டுள்ள முயற்சி நல்லது. இந்த நடவடிக்கை குழப்பத்தை அகற்றி, பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தினால் அது வரவேற்கப்பட வேண்டும். தற்போது கர்கானில் அமைதி நிலவுகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x