Published : 18 Jan 2022 06:57 AM
Last Updated : 18 Jan 2022 06:57 AM
புதுடெல்லி: கோவா சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் கட்சிகள் களத்தில் உள்ளன. இந்நிலையில் கோவா காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரான கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று கூறும்போது, ‘‘கோவாவில் காங்கிரஸ் வலுவாகவே உள்ளது. அங்கு பாஜக அல்லாத வாக்குகளை பிரிக்கும் கட்சியாக மட்டுமே ஆம் ஆத்மி இருக்கும். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்’’ என்று தெரிவித்தார்.
ப.சிதம்பரத்தின் கருத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் கூறும்போது, “வாக்குகள் பிரிவதாக ப.சிதம்பரம் கூறி அழுவதை நிறுத்த வேண்டும். பாஜக மீதான அதிருப்தியால் வெல்வோம் என நம்பிக்கை வைத்திருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் 17 எம்.எல்.ஏக்களில் 15 பேர் பாஜகவில்தான் உள்ளனர். எனவே காங்கிரஸுக்கு விழும் வாக்குகள் பாஜகவுக்குத்தான் செல்லும். நாங்கள் மிகவும் எளிமையான, அப்பாவியான கட்சி. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் நாங்கள் ஒரு கட்சியைத் தோற்கடிப்போம். கோவாவில் வளர்ச்சியை எப்படிக் கொண்டு வருவது என்பது எனக்குத் தெரியும்” என்றார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment